இனி பாகிஸ்தான் வருவார்கள்: சர்ஃபராஸ் நம்பிக்கை

இனி பாகிஸ்தான் வருவார்கள்: சர்ஃபராஸ் நம்பிக்கை
இனி பாகிஸ்தான் வருவார்கள்: சர்ஃபராஸ் நம்பிக்கை
Published on

இனி மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்து  கிரிக்கெட் விளையாடும் என நம்புவதாக அந்த அணியின் கேப்டன் சர்ஃபராஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரின் வெற்றி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் கூறியதாவது, இது ஒருநாள், இரு நாள் அல்ல நீண்ட நாள் நினைவில் நிற்கும் வெற்றி. இந்த நாள் நெடு நாளைக்கு நினைவில் இருக்கக்கூடிய நாள் என தெரிவித்தார். 
கடந்த 2009ம்ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தானில் எந்த முக்கிய கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. இனி மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்து  கிரிக்கெட் விளையாடும் என நம்புவதாக சர்ஃபராஸ் தெரிவித்தார். 
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரின்  இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com