சென்னை இப்போ வித்தியாசமா இருக்கு: தினேஷ் கார்த்திக்

சென்னை இப்போ வித்தியாசமா இருக்கு: தினேஷ் கார்த்திக்
சென்னை இப்போ வித்தியாசமா இருக்கு: தினேஷ் கார்த்திக்
Published on

சென்னைக்கு வருவது இப்போது வித்தியாசமாக இருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

11வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. இந்தப்போட்டியில் 2ஆண்டு தடைக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியுள்ளது. இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதனால் இன்று நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை அணியுடனான போட்டியில் விளையாட தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி நேற்று மாலை சென்னை வந்தடைந்தது.

இதுபற்றி கொல்கத்தா அணி கேப்டனும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் “ சென்னைக்கு வருவது வித்தியாசமாக இருக்கிறது; என்னைச் சுற்றி பலத்த பாதுகாப்பும் உள்ளது” என பதிவிட்டுள்ளார். இதற்கு ஏராளமானோர் ட்விட்டரில் பதில் அளித்துள்ளனர். தமிழனுக்கு தமிழ்நாட்டில் விளையாட பலத்த பாதுகாப்பா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் சிலர்  “ என்ன நினைச்சீங்க? நம்ம சென்னை, இப்ப வேற லெவல். தமிழனாக இருக்கும் நீங்களும் குரல் கொடுக்க வேண்டும். ஹீரோ ஆனாலே இது எல்லாம் இருக்கணும் ப்ரோ” என பதிவிட்டுள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com