ஒலிம்பிக் போட்டிக்கான ஆயிரம் நாட்கள் கவுண்ட் டவுண்

ஒலிம்பிக் போட்டிக்கான ஆயிரம் நாட்கள் கவுண்ட் டவுண்
ஒலிம்பிக் போட்டிக்கான ஆயிரம் நாட்கள் கவுண்ட் டவுண்
Published on

2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் ஆயிரம் நாட்களே உள்ளன என்பதை குறிக்கும் வகையில், தலைநகர் டோக்கியோவில் கவுண்ட் டவுண் தொடங்கியது. 

32–வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020–ம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நடத்தப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் ஆயிரம் நாட்களே உள்ளன என்பதை குறிக்கும் வகையில், தலைநகர் டோக்கியோவில் கவுண்ட் டவுண் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் டோக்கியோ கவர்னர் யூரிகோ கோய்கே , பிரபல பளுத்தூக்குதல் வீரர் ஹிரோமி மியாகி உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 3 பேர் கூடைப்பந்தாட்ட போட்டியை விளக்கும் வகையில் காட்சிப் போட்டியும் ந‌டத்தப்பட்டது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com