351 ரன்கள் குவித்த இங்கிலாந்து : ஜோ ரூட் - மார்கன் அதிரடி

351 ரன்கள் குவித்த இங்கிலாந்து : ஜோ ரூட் - மார்கன் அதிரடி

351 ரன்கள் குவித்த இங்கிலாந்து : ஜோ ரூட் - மார்கன் அதிரடி
Published on

பாகிஸ்தானுடனான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 351 ரன்கள் குவித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே ஆன 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று ஹெட்டிங்லி மைதனாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். வின்ஸ் 33 (32) ரன்கள் மற்றும் பேர்ஸ்டோவ் 32 (21) ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் கேப்டன் மார்கன் அதிரடியால் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 76 (64) ரன்களில் மார்கன் விக்கெட்டை பறிகொடுக்க, 84 (73) ரன்களில் ரூட் அவுட் ஆனார். அடுத்ததாக வந்த பட்லர் 34 (34), பென் ஸ்டோக்ஸ் 21 (29) ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் ஷாயீன் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளையும், இமாத் வாசிம் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com