சூர்யகுமார் விளாசிய பந்து; பவுண்டரி லைனில் ஒரு கையில் பிடித்த ஜோர்டன் - வைரல் கேட்ச்!

சூர்யகுமார் விளாசிய பந்து; பவுண்டரி லைனில் ஒரு கையில் பிடித்த ஜோர்டன் - வைரல் கேட்ச்!

சூர்யகுமார் விளாசிய பந்து; பவுண்டரி லைனில் ஒரு கையில் பிடித்த ஜோர்டன் - வைரல் கேட்ச்!
Published on

இந்திய பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவை ஆட்டத்தில் இருந்து வெளியேற்ற இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டன் பவுண்டரி லைனில் பிடித்த ‘ஒரு கை’ கேட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் ஐந்தாவது டி20 போட்டியில் இந்த அற்புதமான கேட்சை பிடித்துள்ளார் அவர். 

ரஷீத் வீசிய 14 வது ஓவரின் இரண்டாவது பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸர் அடிக்க முயன்றிருப்பார் சூரியகுமார். இருந்தாலும் மிட் ஆன் திசையில் நின்று கொண்டிருந்த ஜோர்டன் வேகமெடுத்து ஒரே மூச்சாக ஓடி அந்த பந்தை ஒரு கையில் பிடித்திருப்பார். இருந்தாலும் பேலன்ஸூக்காக பக்கத்தில் இருந்த பீல்டர் ஜேசன் ராயிடம் அந்த பந்தை த்ரோ செய்திருப்பார் ஜோர்டன். 

அந்த அற்புதமான கேட்சால் சூரியகுமார் யாதவ் அவுட்டாகி வெளியேறினார். அந்த கேட்சை நெட்டிசன்கள் ‘ஆஹா.. ஓஹோ’ என கொண்டாடி வருகின்றனர். முன்னதாக, சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் சிக்ஸரும், பவுண்டரியுமான வான வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தார். அவரது ரன்குவிப்பு வேகத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று கேப்டன் மோர்கன் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் எதிராத விதமான இந்த விக்கெட் வீழ்ந்தது. இல்லையென்றால் இன்னும் சற்று நேரம் சூர்யகுமார் சரவெடியாக வெடித்து இருப்பார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com