விளையாட்டு
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்-க்கு திடீர் தடை!
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்-க்கு திடீர் தடை!
ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக, இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்-க்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 21 நாட்கள் தடை விதித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். 70 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2419 ரன் எடுத்துள்ள இவரின் அதிகப்பட்சம் 171 ரன். 60 டி20 போட்டிகளில் விளையாடி 1644 ரன் சேர்ந்துள்ளார். அதிகப்பட்சம் 116.
உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியிலும் இடம்பெற்றுள்ள ஹேல்ஸ், ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 21 நாட்கள் கிரிக்கெட் விளையாட அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
பென் ஸ்டோக்ஸூடன் இணைந்து பார் ஒன்றில் தகராறில் ஏற்பட்ட பிரச்னைக்காக, ஹேல்ஸ் ஏற்கனவே தடையை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.