விராத் கோலி என்னையா குறிப்பிட்டார்?: ஸ்மித் கேள்வி

விராத் கோலி என்னையா குறிப்பிட்டார்?: ஸ்மித் கேள்வி
விராத் கோலி என்னையா குறிப்பிட்டார்?: ஸ்மித் கேள்வி
Published on

ஆஸ்திரேலிய அணியில் குறிப்பாக இரு வீரர்களுடன், நண்பர்களாக இருக்க முடியாது என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி கூறியிருந்தார்.

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் புனே அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக களமிறங்குகிறார். ஐபிஎல் தொடருக்கு முன்பாக, புனே அணியின் சார்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக ஸ்மித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்த ஸ்மித், விராத் கோலி என் பெயரைக் குறிப்பிட்டிருப்பாரா என்பது குறித்து தெரியாது. இந்த கேள்விக்கு விராத் கோலிதான் பதில் கூற வேண்டும் என்று கூறினார். இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடரில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், இரு அணி கேப்டன்களும் பரஸ்பரம் விமர்சித்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com