'சிறந்த வீரர் ஒருவரை அணியில் சேர்க்க மறுத்த தோனி’- என்.சீனிவாசன் தகவல்

'சிறந்த வீரர் ஒருவரை அணியில் சேர்க்க மறுத்த தோனி’- என்.சீனிவாசன் தகவல்
'சிறந்த வீரர் ஒருவரை அணியில் சேர்க்க மறுத்த தோனி’- என்.சீனிவாசன் தகவல்
Published on

அடுத்த சில நாட்களில் நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ள சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், முன்னாள் பி.சி.சி.ஐ தலைவருமான என்.சீனிவாசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் தேர்வில் தோனியின் அக்கறை குறித்து தெரிவித்துள்ளார்.

"நாங்கள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அவுட்ஸ்டேண்டிங் வீரர் ஒருவரை சென்னனை அணிக்காக ஏலத்தை எடுக்க முனைந்தோம். அது குறித்து கேப்டன் தோனியிடம் தெரிவித்தோம். ஆனால் அவர் அணிக்குள் வந்தால் அணியின் ஒற்றுமையை கெடுத்து விடுவார் என சொன்னார். அதோடு அந்த வீரரை ஏலத்தில் எடுக்கவும் வேண்டாம் என சொல்லிவிட்டார்” என வெபினார் மூலம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் என்.சீனிவாசன்  தெரிவித்துள்ளார். 

அந்த வீரர் யார் என்ற பெயரை அவர் தெரிவிக்கவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com