இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொலை!

இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொலை!
இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொலை!
Published on

இலங்கையில் கிரிக்கெட் வீரரின் தந்தை அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர், தனஞ்செய டி சில்வா. இவர் தந்தை ரஞ்சன் டி சில்வா. இவர் கவுன்சிலராக இருந்தார். இலங்கை தலைநகர் கொழும்பில் வசித்து வந்த ரஞ்சன், அடையாளம் தெரியாத நபரால் நேற்று இரவு சுடப்பட்டார். ரத்னமலானை பகுதியில் உள்ள ஞானேந்திரா சாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து அவரை அருகில் உள்ள கலுபோவ்லியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர்.

இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுவதற்காக இன்று அங்கு செல்கிறது. அந்த அணியில் இடம் பிடித்திருந்தார் தனஞ்செய டி சில்வா. இந்த சம்பவத்தை அடுத்து அங்கு செல்வதில் இருந்து விலகியுள்ளார்.  ரஞ்சனின் மறைவை அடுத்து ஏராளமான கிரிக்கெட் வீரர்களும் உறவினர்களும் அவரது உடலுக்கு நேற்று இரவு அஞ்சலி செலுத்தினர்.

கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com