சவுரவ் கங்குலியின் உறவினருக்கு கொரோனா

சவுரவ் கங்குலியின் உறவினருக்கு கொரோனா
சவுரவ் கங்குலியின் உறவினருக்கு கொரோனா
Published on

சவுரவ் கங்குலியின் உறவினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரர் சினேகாஷிஷின் மனைவிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் "சினேகாஷிஷின் மாமியார் மற்றும் மாமனாருக்கும் கொரோனா பாசிட்டிவ் கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் நகரத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் ஹோமில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர் சினேகாஷிஷ்கு பரிசோதனை நெகட்டிவ் என்பது தெரிய வந்ததால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்" என தெரிவித்தார். 

இதுகுறித்து நர்சிங் ஹோம் வட்டாரங்கள் கூறுகையில் "அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அந்த பரிசோதனையின் முடிவைப் பொறுத்தே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்களா அல்லது சிகிச்சை தொடருமா என்பது தெரியவரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com