சேப்பாக்கத்தில் நான்காவது போட்டி: டிக்கெட்டுக்காக அலைமோதும் கூட்டம்!

சேப்பாக்கத்தில் நான்காவது போட்டி: டிக்கெட்டுக்காக அலைமோதும் கூட்டம்!
சேப்பாக்கத்தில் நான்காவது போட்டி: டிக்கெட்டுக்காக அலைமோதும் கூட்டம்!
Published on

சென்னையில் நடைபெறவுள்ள நான்காவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

சென்னை சூப்பர் கிங்சின் கோட்டை என்றால் அது சேப்பாக்கம் மைதானம் தான். இந்த ஆண்டு ஐபிஎல்லை பொறுத்த வரை இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி தோல்வியை தழுவவில்லை. நேற்று நடைபெற்ற போட்டியிலும் பஞ்சாப் அணியை சென்னை வென்றது. இந்நிலையில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான போட்டி, சேப்பாக்கத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. 

இதனையடுத்து இந்த ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து ரசிகர்கள் டிக்கெட்களை வாங்கி வருகின்றனர். சென்னை அணி நடப்பு சீசனில் சொந்த மண்ணில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதால் சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள நான்காவது போட்டியைக் காண, ரசிகர்கள் ஆவலுடன் டிக்கெட்களை வாங்கி வருவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

நடப்புச் சாம்பியனான சென்னை அணி, 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐந்து போட்டிகளிலு விளையாடி, நான்கில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com