ஆஸ்திரேலிய ஓபன்: ரோஹன் போபண்ணா ஜோடி தோல்வி!

ஆஸ்திரேலிய ஓபன்: ரோஹன் போபண்ணா ஜோடி தோல்வி!

ஆஸ்திரேலிய ஓபன்: ரோஹன் போபண்ணா ஜோடி தோல்வி!
Published on

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்பர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்று கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, சீனாவின் இங்இங் டூயன் ஜோடி முதல் சுற்றில் தோல்வியடைந்தது.

இந்த ஜோடி 4-6, 4-6 என்ற நோ் செட்களில் அமெரிக்காவின் பெத்தானி மடேக் சேன்ட்ஸ் - இங்கிலாந்தின் ஜேமி முர்ரே ஜோடியிடம் தோல்வி கண்டது. இதேபோல் ஆடவர் இரட்டையா் பிரிவில் ஜப்பானின் பென் மெக்லேக்லேனுடன் இணைந்து விளையாடினார் போபண்ணா. அதிலும் போபண்ணா ஜோடி முதல் சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியாவின் திவிஜ் சரண், அங்கிதா ரெய்னா ஆகியோரும் தங்களுடைய பிரிவில் முதல் சுற்றோடு ஏற்கெனவே வெளியேறிவிட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com