மும்பை இண்டியன்ஸ் பந்துவீச்சாளருக்கு 2 வருடம் தடை

மும்பை இண்டியன்ஸ் பந்துவீச்சாளருக்கு 2 வருடம் தடை
மும்பை இண்டியன்ஸ் பந்துவீச்சாளருக்கு 2 வருடம் தடை
Published on

மும்பை இண்டியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் 2 வருடம் தடை விதித்துள்ளது.
 
19 வயதுக்குட்பட்டோருக்கான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ரஷிக் சலாம் என்பவரும் அறிவிக்கப்பட்டிருந்தார். இவர் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர். 17 வயதிலேயே அதிக வேகமாக பந்துவீசுபவர் எனவும் எதிர்காலத்தில் சிறப்பாக விளையாடுவார் எனவும் கூறப்பட்டது. மும்பை அணிக்காக இவர் ஒரே ஒரு போட்டியில்தான் ஆடினார்.

இவர், தனது வயது தொடர்பான சான்றிதழை போலியாக, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சமர்பித்ததாகக் கூறப்படுகிறது. அது கண்டுபிடிக்கப் பட்டதை அடுத்து, அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் 2 வருடம் விளையாடுவதற்கு தடை விதித்துள்ளது. இதையடுத்து சலாமுக்குப் பதிலாக பிரபாத் மவுரியா சேர்க்கப்பட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com