தாரங்கா சதம் வீண்: பாக். மீண்டும் வெற்றி!

தாரங்கா சதம் வீண்: பாக். மீண்டும் வெற்றி!
தாரங்கா சதம் வீண்: பாக். மீண்டும் வெற்றி!
Published on

பாகிஸ்தான்- இலங்கை அணிகள் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆரம்பத்தில் 79 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அந்த அணி, பாபர் அசாமின் சிறப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. பாபர் அசாம் 101 ரன்னும், ஷாதப் கான் 52 ரன்னும் எடுத்தனர்.  பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி, 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் உபுல் தாரங்கா சதமடித்தும் (112 ரன்கள்) மற்ற வீரர்கள் சொதப்பியதால் தோல்வியை சந்தித்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com