“4 போட்டிகளில் தோற்றதால் நாங்கள் தகுதியற்றவர்கள் என்பதல்ல” - பார்திவ் படேல்

“4 போட்டிகளில் தோற்றதால் நாங்கள் தகுதியற்றவர்கள் என்பதல்ல” - பார்திவ் படேல்
“4 போட்டிகளில் தோற்றதால் நாங்கள் தகுதியற்றவர்கள் என்பதல்ல” - பார்திவ் படேல்
Published on

4 போட்டிகளில் தோற்றுவிட்டோம் என்பதால் தாங்கள் தகுதியற்றவர்கள் என்பதல்ல என்று பெங்களூர் கீப்பர் பார்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 17வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே இன்று நடைபெறவுள்ளது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. பெங்களூர் அணி விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் கூட வெறி பெறாமல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

எனவே இந்தப் போட்டியில் அந்த வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதற்காக பெங்களூர் அணியில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. இன்றைய போட்டியில் ஹெட்மெயருக்கு பதிலாக சவுதியையும், மொயின் அலிக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரையும் அணியில் சேர்க்க பெங்களூர் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் போட்டி தொடர்பாக பேசியுள்ள பார்திவ் படேல், “வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் 4 போட்டிகளில் தோல்வியடைந்ததை சொல்வதற்கு வெட்கப்பட தேவையில்லை. கண்டிப்பாக அது உண்மை தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நாங்கள் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கமாட்டோம். அதனால் 0-4 என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் ஒன்று, ட்ரெஸ்ஸிங் ரூமில் நாங்கள் அனைவரும் இப்படி ஒரு டீமை பெற்றுள்ளோம் என்பதை நினைத்து புத்துணர்ச்சி பெறுகிறோம். எங்கள் அணியின் சிறப்புகளை நாங்கள் பேசிக்கொள்கிறோம். தொடர்ந்து 4 போட்டிகளை தோற்றதால் நாங்கள் தகுதியற்றர்வகள் என்பதல்ல” என்று கூறினார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com