இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் பதிலடி

இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் பதிலடி
இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் பதிலடி

திமுகவை பற்றி குறை கூறுவதை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரசாரக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தான் ஒரு பிரதமர் என்பதை மறந்து தரமற்ற முறையில் திமுகவை மோடி விமர்சித்ததை வன்மையாக கண்டிக்கிறேன். திமுகவை குறைக்கூறும் மோடியிடம் என்ன ஆதாரம் இருக்கிறது? என்ன புள்ளி விவரம் இருக்கிறது? அராஜகத்தைப்பற்றி யார் பேசுவது?

2002ல் குஜராத்தில் நடந்த படுகொலை மறந்து போய்விட்டதா? குஜராத்தில் இருந்து டெல்லி வந்துவிட்டால் மறந்துவிடுவார்களா? விவசாயிகளின் மரணத்திற்கு யார் காரணம்? திமுகவை பற்றி பேசுவதை பிரதமர் மோடி இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். முன்பு ஜெயலலிதாவின் ஊழலை விமர்சித்த மோடி, அவர் படத்திற்கு மலர்தூவி நாடகம் ஆடுகிறார். அந்த மோடியா, லேடியா என ஜெயலலிதா உரக்க பேசியதை பிரதமர் மோடி தெரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதாவின் கட்சி தொண்டர்களை ஏமாற்ற வந்துள்ளார் மோடி. இதைப்பார்த்து மக்கள் ஏமாறமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com