நீதிபதி தஹில் ரமாணி இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: நீதிமன்றத்தை புறக்கணிக்க வழக்கறிஞர்கள் முடிவு

நீதிபதி தஹில் ரமாணி இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: நீதிமன்றத்தை புறக்கணிக்க வழக்கறிஞர்கள் முடிவு
நீதிபதி தஹில் ரமாணி இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: நீதிமன்றத்தை புறக்கணிக்க வழக்கறிஞர்கள் முடிவு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியை  மேகாலயாவிற்கு பணியிடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிபதியின் ராஜினாமாவை குடியரசு தலைவர்  நிராகரிக்கக் கோரியும்  வரும் 10-ஆம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு மற்றும் பதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அக்கூட்டமைப்பினர், “ 75 நீதிபதிகள் கொண்ட சார்ட்டர்ட் நீதிமன்ற அந்தஸ்து உடைய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவரை, தலைமை நீதிபதி உட்பட 3 நீதிபதிகள் கொண்ட சிறிய நீதிமன்றமான மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றியது நியாயமற்றது. நீதித்துறையில் வெளிப்படைத் தன்மை இல்லாததை இது எடுத்துக்காட்டுகிறது” என்று கூறினார்.

மேலும், “எந்த காரணம் அடிப்படையில் தஹில் ரமாணி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார் என்பதை உச்ச நீதிமன்றம் கொலிஜீயம் இதுவரை தெரிவிக்கவில்லை. தஹில் ரமாணியின் ராஜினாமாவை உச்ச நீதிமன்ற கொலிஜீயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில் அவருக்கு உச்ச நீதிமன்றம் பதவி உயர்வு வழங்கியிருக்க வேண்டும்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com