நடிகர் ஷாரூக் கான் முகத்தில் மை தெளிப்போம்: ஒடிசா அமைப்பு திடீர் மிரட்டல்!

நடிகர் ஷாரூக் கான் முகத்தில் மை தெளிப்போம்: ஒடிசா அமைப்பு திடீர் மிரட்டல்!
நடிகர் ஷாரூக் கான் முகத்தில் மை தெளிப்போம்: ஒடிசா அமைப்பு திடீர் மிரட்டல்!

ஒடிசாவுக்கு வரும் நடிகர் ஷாரூக் கானின் முகத்தில் மையைத் தெளிப்போம் என்று அங்குள்ள கலிங்க சேனா என்ற அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

ஷாரூக் கான், கரீனா கபூர் நடித்து 2001 ஆம் ஆண்டு வெளியான படம், ‘அசோகா’. இந்தப் படத்தில் அஜீத் குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந் தார். சந்தோஷ் சிவன் இயக்கிய இந்தப் படம் ஒடிசாவில் ஒரு வாரம் மட்டுமே ஓடியது. படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி போராட்டம் நடந்ததால், அங்கு படம் திரையிடப்படவில்லை.

’அசோகா’ வெளியாகி 17 வருடம் ஆன நிலையில், இப்போது புது பிரச்னை கிளம்பி இருக்கிறது. அந்த படத்தில் கலிங்கப் போரை தவறாகச் சித்தரித்துள்ளதாகவும் இதன் மூலம் ஒடிசா மக்களின் உணர்வுகளை பாதித்துவிட்டதாகவும் கலிங்க சேனா என்ற அமைப்பு புகார் கூறியுள்ளது. இது தொடர்பாக இதன் தலைவர் ஹேமந்த ராத் கடந்த 1 ஆம் தேதி போலீசில் புகாரும் கொடுத்திருந்தார். 

இந்நிலையில் ஒடிசாவில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வரும் 27 ஆம் தேதி ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. இதை காண வருமாறு நடிகர் ஷாரூக் கானுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று அவர் விளையாட்டைப் பார்க்க வர இருக்கிறார்.

’கலிங்க போரை தவறான கண்ணோட்டத்தில் சித்தரித்தற்காக, ஷாரூக் கான் மன்னிப்புக் கேட்க வேண்டும், இல்லை என்றால் ஒடிசா அவரும் அவர் முகத்தில் மையை வீசுவோம். அவர் வரும் இடங்களில் எல்லாம் கருப்புக் கொடி காட்டுவோம்’ என்று அந்த அமைப்பின் செயலாளர் நிஹார் பானி தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்காக வரும் அனைத்து விவிஐபிகளுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com