திருநாவுக்கரசு சின்னப் பிள்ளைதனமாக பேசுகிறார்: தமிழிசை

திருநாவுக்கரசு சின்னப் பிள்ளைதனமாக பேசுகிறார்: தமிழிசை
திருநாவுக்கரசு சின்னப் பிள்ளைதனமாக பேசுகிறார்: தமிழிசை

தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பற்றி ரைமிங்காக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

இரட்டை இலைச் சின்னத்தை முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “அதிமுக அமைச்சர்கள் இரட்டை இலை எங்களுக்குத்தான் கிடைக்கும். மேலே உள்ளவர்கள் அதைப் பார்த்துக்கொள்வார்கள் என தெரிவித்திருந்தார்கள். அதன்படியே தற்போது மேலே உள்ள மோடி பார்த்து, ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சின்னத்தை வழங்கியுள்ளார்” என்று கூறியிருந்தார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, "இரட்டை இலைச்'சின்னம்'பாஜ.,வாங்கிக் கொடுத்தது என்று 'சின்னப்'பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர்" என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com