சென்னையில் 135, கோவையில் 123 பேருக்கு கொரோனா தொற்று - அனைத்து மாவட்டங்களின் முழுநிலவரம்

சென்னையில் 135, கோவையில் 123 பேருக்கு கொரோனா தொற்று - அனைத்து மாவட்டங்களின் முழுநிலவரம்
சென்னையில் 135, கோவையில் 123 பேருக்கு கொரோனா தொற்று - அனைத்து மாவட்டங்களின் முழுநிலவரம்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று 1,075 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 1,061 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,22,835 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 1,061 ஆக உள்ளது. சென்னையில் நேற்று 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 135 ஆக குறைந்திருக்கிறது.

கொரோனாவால் இன்று 12 பேர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,072 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 9 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 12,051ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 1,286 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,51,431 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com