சிறுமி பாலியல் வழக்கு| ஜூன் 17 சிஐடி முன்பு ஆஜர்.. பெங்களூரு திரும்பிய எடியூரப்பா!

கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா, ஜூன் 17ஆம் தேதி சிஐடி முன்பு ஆஜராகப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா
எடியூரப்பாஎக்ஸ் தளம்
Published on

கர்நாடகாவின் மூத்த பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா மீது சில மாதங்களுக்கு முன்பு, பெண் ஒருவர், மோசடி வழக்குத் தொடர்பாக உதவி கேட்க சந்தித்தபோது அவர் தனது 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனினும் இந்தப் புகாரை எடியூரப்பா மறுத்திருந்தார்.

இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை சிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், புகாரளித்த பெண் சமீபத்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, வழக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எடியூரப்பா மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த வழக்கில் ஏற்கெனவே புகார் கொடுத்து இதுவரை எடியூரப்பா கைது செய்யப்படவில்லை என சிறுமியின் சகோதரர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இதையும் படிக்க: கர்நாடகா கொலை வழக்கு|கார் டிரைவர் அளித்த பகீர் வாக்குமூலம்.. நடிகர் தர்ஷனை பாதுகாக்கும் காங். ஆட்சி?

எடியூரப்பா
சிறுமி பாலியல் வழக்கு| எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை.. கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு!

இதற்கிடையே இந்த வழக்கு தொடா்பாக ஜூன் 12ஆம் தேதி சிஐடி முன்பு எடியூரப்பா ஆஜராகாததால், பெங்களூரு நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. அதேநேரத்தில், இந்த பிடிவாரண்ட்டுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்தது. அதில், ஜூன் 17ஆம் தேதி வரை எடியூரப்பாவை கைது செய்ய தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, “ஜூன் 17ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக எழுத்துப்பூர்வமாக முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். சிஐடி கைது செய்ய தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நான் ஜூன் 17ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகிறேன். தேவையில்லாமல் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர். நான் யாரையும் குற்றம்சொல்ல விரும்பவில்லை, அனைவருக்கும் தெரியும். சதியில் ஈடுபடுவோருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: வேலை செய்யாமல் ஏமாற்றிய வங்கி ஊழியர்கள்.. டெக்னாலஜி மூலம் கண்டுபிடித்த நிறுவனம்! சுவாரஸ்ய பின்னணி!

எடியூரப்பா
சிறுமி பாலியல் வழக்கு| எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட்.. பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com