விஷம் கொடுத்தும் சாகாததால் கணவனை குத்திக் கொலை செய்த கொடூர மனைவி!

விஷம் கொடுத்தும் சாகாததால் கணவனை குத்திக் கொலை செய்த கொடூர மனைவி!
விஷம் கொடுத்தும் சாகாததால் கணவனை குத்திக் கொலை செய்த கொடூர மனைவி!
Published on
தனது கணவருக்கு விஷம் கலக்கி கொடுத்தும் சாகாததால் மனைவி கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் குஜராத் தலைநகர் காந்திநகரில் அரங்கேறியுள்ளது. 
 
குஜராத் தலைநகர் காந்தி நகரைச் சேர்ந்த வக்ஜி படேல் மற்றும் உமியா படேல் என்ற தம்பதியினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணமான சில நாட்களில் இருந்தே ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு, பிடிக்காமல் வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி உமியா படேல் தனது கிராமத்தில் பெற்றோருடன் இருந்து வந்துள்ளார். எப்போதாவது கணவரின் வீட்டுக்கு வந்து செல்வதுமாக இருந்துள்ளார்.
 
ஒருக்கட்டத்தில் கணவர் மீது விரக்தியடைந்த உமியா அவரை தீர்த்துக்கட்டுவதென முடிவெடுத்துள்ளார். இதற்காக உணவில் விஷம் கலந்து கணவருக்கு கொடுத்துள்ளார். ஆனால் விஷம் எதிர்பார்த்தபடி வேலை செய்யாததால் கத்தியால் குத்தியதில் வக்ஜி படேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து உமியாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் உமியாவை கைது செய்த காவல்துறை அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். 
 
முன்னதாக போலீஸ் விசாரணையில் தன்னுடைய கணவரை தான் கத்தியால் குத்துவதற்கு முன்பு அவரே விஷம் அருந்தி கொண்டதாக தெரிவித்தார். ஆனால் மேற்கொண்டு விசாரித்ததில் விஷம் கொடுத்து சாகாததால் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com