மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்கள் - தேர்தல் எப்போது?

மாநிலங்களவையில் 10 எம்.பி.க்கள் பதவி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், எப்போது தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாநிலங்களவை
மாநிலங்களவைட்விட்டர்
Published on

மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த பியூஷ் கோயல், ஜோதிராதித்ய சிந்தியா, சார்பானந்த சோனாவால், கே.சி.வேணுகோபால், மிசா பாரதி உள்ளிட்ட 10 எம்.பி.க்கள், நடப்பு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

மாநிலங்களவை
மாநிலங்களவை

இதனால் அசாம், பீஹார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 2 எம்.பி.க்கள், ஹரியானா, திரிபுரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தலா ஒரு எம்.பி. என 10 மாநிலங்களவை எம்.பி. பதவி காலியாகவுள்ளதாக மாநிலங்களவை செயலகம் அறிவித்துள்ளது.

மாநிலங்களவை
ஆந்திரா: ஜனசேனா கட்சி சட்டமன்றக்குழு தலைவராக பவன் கல்யாண் தேர்வு!

இதையடுத்து மாநிலங்களவையில் காலியாக உள்ள 10 எம்.பி.க்களின் பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com