ஜிஎஸ்டி வரி சுமையைக் குறைக்க மாற்றங்கள் செய்ய வேண்டும்: வருவாய் துறை செயலாளர்

ஜிஎஸ்டி வரி சுமையைக் குறைக்க மாற்றங்கள் செய்ய வேண்டும்: வருவாய் துறை செயலாளர்
ஜிஎஸ்டி வரி சுமையைக் குறைக்க மாற்றங்கள் செய்ய வேண்டும்: வருவாய் துறை செயலாளர்
Published on

சாமானியர்கள், சிறுவணிகர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ஜிஎஸ்டி வரியில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 22வது கூட்டத்தின்போது பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. சித்த, ஆயுர்வேத மருந்துகள், கைத்தறி நூல்கள் உள்ளிட்ட 27 விதமான பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியின் விகிதம் குறைக்கப்பட்டது. மேலும் தொழில் முனைவோர் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதத்திலும் சலுகைகள் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள ஹஸ்முக் ஆதியா, ஜிஎஸ்டி கணக்கு தாக்கல், ஏற்றுமதியாளர்கள் தொகையை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட சில பிரச்னைகள் பெருமளவு குறைந்துள்ளதாக கூறியுள்ளார். அதிகாரமிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களின் வரிகள் குறைக்கப்பட்டதாக கூறிய அவர், சாமானியர்கள், சிறுவணிகர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் வரிகளை மீள்பார்வை செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பொருட்கள் மற்றும் சேவைகள் பிரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜிஎஸ்டி குறித்து திரைப்படங்களில் கூட விமர்சனக் காட்சிகள் இடம்பெறும் நிலையில், மத்திய வருவாய் துறை செயலாளரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறும் வகையில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com