ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக, அக்குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சனிக்கிழமை அன்று ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகளை கொடுத்து வந்துள்ளனர். ஆனால் பரிசோதனை முடிவு கிடைப்பதற்கு தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் அந்த குடும்பத்தினர் தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்று வேறொரு பரிசோதனைக் கூடத்தில் சான்றிதழைப் பெற்று, ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 2 மணியளவில் டெல்லி விமான நிலையத்திலிருந்து விமானத்தில் ஏறிச் சென்றுவிட்டனர்.