காலை தலைப்புச் செய்திகள் | தண்ணீரில் மிதக்கும் பெங்களூர் முதல் வாபஸ் பெறப்பட்ட ரெட் அலர்ட் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, தண்ணீரில் மிதக்கும் பெங்களூர் முதல் வாபஸ் பெறப்பட்ட ரெட் அலர்ட் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
மழையில் மிதக்கும் பெங்களூரு
மழையில் மிதக்கும் பெங்களூருமுகநூல்
Published on
  • சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது. இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கையும் விலக்கிக் கொள்ளப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கல்வி நிலையங்கள் இன்று வழக்கம்போல் செயல்படும் என்றுரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து அறிவிப்பு வெளியானது.

  • சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நல்லமுறையில் கை கொடுத்துள்ளதாக முதலமைச்சர் பேட்டி. எஞ்சியுள்ள 30 சதவிகித பணிகளும் விரைவில் நிறைவடையும் என நம்பிக்கை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுpt web
  • இன்று புதுச்சேரி - நெல்லூர் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • அரசும், மக்களும் தயாராக இருக்க வானிலை அறிவிப்புகள் துல்லியமாக இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

  • பட்டாளம், பெரம்பூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும், பள்ளிக்கரணையிலும் மழைநீர் வடியாததால் மக்கள் அவதி.

மழையில் மிதக்கும் பெங்களூரு
சென்னை | விலகிச்சென்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. விலக்கி கொள்ளப்பட்ட ரெட் அலர்ட்!
  • தென்சென்னைப் பகுதிகள் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க காரணமான ஒக்கியம் மடுவு. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையும், பக்கிங்காம் கால்வாயை இணைக்கும் பகுதியில் நடந்த தூர்வாரும் பணிகளால் சாத்தியமான அற்புதம்.

  • சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 7 லட்சம் பேருக்கு மேல் உணவு வழங்கப்பட்டது என தமிழக அரசு அறிக்கை.

  • ரேசன் கடைகளில் பருப்பும், பாமாயிலும் தீபாவளிக்குத் தங்கு தடையின்றி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மீண்டும் உறுதி செய்துள்ளார்.

தீபாவளிக்கு பருப்பு, பாமாயில் தங்கு தடையின்றி வழங்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி
தீபாவளிக்கு பருப்பு, பாமாயில் தங்கு தடையின்றி வழங்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 விழுக்காடு உயர்வு. சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிப்பு.

  • ஹரியானா முதலமைச்சராக 2வது முறையாக இன்று பதவியேற்கிறார் நயப் சிங் சைனி. அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்

  • ஜம்மு காஷ்மீரின் புதிய முதலமைச்சர் பதவியேற்றார் உமர் அப்துல்லா. அந்நிகழ்ச்சியில், ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு.

மழையில் மிதக்கும் பெங்களூரு
மகளிர் உலகக்கோப்பை| முதலிடத்தில் இருந்த ENG-ஐ வெளியேற்றிய WI! முதல் அரையிறுதியில் AUS vs SA மோதல்!
  • கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறிவிட்டதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு. மோடி அரசுக்கு எதிரான கனடா நாட்டவர்களின் விவரங்கள் இந்தியாவுக்கு பகிரப்படுவதாகவும் புகார்.

  • காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தெற்கு ஆந்திராவில் நீடிக்கிறது கனமழை. தொடர் மழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது பெங்களூரு.

  • பெங்களூருவில் நடைபெறவிருந்த இந்தியா - நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து. இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று போட்டி தொடங்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

  • அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான கருத்து கணிப்பில் முந்துகிறார் கமலா ஹாரிஸ். சுகாதாரம், ஜனநாயக அச்சுறுத்தலுக்கு கமலா தீர்வு காண்பார் என 45 சதவீதம் பேர் ஆதரவு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com