தலைப்புச் செய்திகள்|வயநாடு நிலச்சரிவு-133 பேர் பலி To நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமனின் விளக்கம்!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, வயநாடு நிலச்சரிவு முதல் பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர் இல்லாதது குறித்து நிர்மலா சீதாராமன் அளித்த விளக்கம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க ராணுவம், பேரிடர் மீட்புப் படைகள் இரவிலும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இந்த கனமழை காரணமாக, 133 பேர் உயிரிழப்பு மற்றும் 128 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

  • சேறும் சகதியுமான சூரல்மலை பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

  • கனமழை எதிரொலியாக கேரளாவில் 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும் எனவும் அறிவிப்பு.

  • கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் இருவர் உயிரிழந்த சூழலில், உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி. மேலும், கேரளாவுக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  • மோசமான வானிலையால் வயநாடு பயணத்தை ஒத்தி வைத்த ராகுல் காந்தி, பிரியங்கா. இந்நிலையில், விரைவில் வருகை புரிந்து தேவையான உதவிகளை செய்வோம் என எக்ஸ் தளத்தில் பதிவு.

  • தொடர் நீர்வரத்தால் முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை. இதனால், 16 கண் மதகு வழியாக உபரி நீர் முழுவதும் வெளியேற்றம்.

  • தமிழ்நாட்டிற்கு ஆகஸ்ட் மாதத்திற்கான 45.95 டி.எம்.சி. நீரை வழங்கவேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி ஒழங்காற்று குழு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  • நிலமோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு பிணை கோரிய வழக்கில், சிபிசிஐடி காவல்துறையிடம் தினமும் கையெழுத்திடவேண்டும் என நிபந்தனை.

  • பட்ஜெட்டில் மாநிலத்தின் பெயர் இல்லையென்றால் புறக்கணிப்பு என அர்த்தமில்லை என பட்ஜெட் மீதான பதிலுரையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

  • புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ளது. துணைநிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் உரையுடன் ஆரம்பமாகிறது.

  • ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கம் வென்றது. குத்துச் சண்டையில் அமித் பாங்கல், பிரீத்தி பவார் தோல்வியடைந்தனர்.

  • இலங்கைக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com