இன்றைய காலை தலைப்புச்செய்திகள்|விக்கிரவாண்டியில் வெல்லப்போவது யார்? To தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, விக்கிரவாண்டியில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை முதல் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • இன்று காலை 8 மணிக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாகைசூடப்போவது யார்? என்பது இன்று தெரியவரும்.

  • சென்னையின் பல இடங்களில் இரவில் கொட்டிய கனமழையால் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

  • திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை ஏற்பட்டது. மேலும், தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

  • நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு.மேலும், காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என அறிவிப்பு.

  • காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசின் செயல் ஏற்கத்தக்கது அல்ல என எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  • மதுரையில் பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்களை நெல்லையில் சுற்றி வளைத்த தனிப்படை காவல்துறை.

  • கோவை அருகே வேகமாக வந்த தனியார் பேருந்தால் கோர விபத்து ஏற்பட்டதில், சாலையோரம் நின்றிருந்த இருவர் மீது மோதியதில் ஒருவர் உயிரிழப்பு ஏற்பட்டது.

  • ஏமனில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒன்று கூடி பேரணி நடத்திய மக்கள், இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

  • விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லப்போவது யார்?. இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அல்கராஸ் உடன் மோதுகிறார் ஜோகோவிச்.

  • ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா கோலாகலம் நடைப்பெற்றது.இதில், வெளிநாட்டு தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களின் கலந்துக்கொண்டனர். இதனா, விழாக்கோலம் பூண்டதாக மாறியது மும்பை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com