தலைப்புச் செய்திகள்| திமுகவுக்கு பா.ரஞ்சித்தின் கேள்வி To உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை தாக்குதல்

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, முதலமைச்சரை நோக்கி இயக்குநர் ரஞ்சித்தின் கேள்வி முதல் உக்ரைன் குழந்தைகள் மருத்துவமனை தாக்குதல் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
  • ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் புதினுடன் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய புதின், ”மோடி மீண்டும் பிரதமரானது விபத்தல்ல , பல ஆண்டு உழைப்பின் பலன்.” என்று தெரிவித்துள்ளார்.

  • ஜம்மு கஷ்மீரில் ரோந்துபடை வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டதில், 5 வீரர்கள் வீரமரணம், மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • மத்திய அரசு கொண்டு வந்த குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து உத்தரவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

  • இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் ஓய்ந்தது பரப்புரை். இறுதிநாளில் தீவிரமாக அரசியல் தலைவர்கள் வாக்குசேகரித்தனர்.

  • தமிழ்நாட்டில் காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்.

  • உண்மையிலேயே அரசுக்கு பட்டியலின மக்கள் மீது அக்கறை இருக்கிறதா ..இல்லை, வெறும் வாக்குக்காக மட்டுமே சமூக நீதியா என்று தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்

  • சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றார்.அதில், ரவுடிகளை கட்டுப்படுத்துவதே முதல் பணி என பேட்டியளித்துள்ளார்.

  • விஷசாராய மரணங்கள் தொடர்பான சங்கராபுரம் காவல்நிலைய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தவறிழைத்தவர்களை கண்டுபிடிக்காவிட்டால் மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும், தேசிய தேர்வுகள் முகமை, சிபிஐ, மத்திய அரசு உரிய பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

  • உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் ஏவுகனை தாக்குதலில் 36 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் குழந்தைகள் மருத்துவமனையும் தாக்கப்பட்டதாக உக்ரைன் தகவல அளித்துள்ளது.

  • பாரிஸ் ஒலிம்பிக்கில் தேசிய கொடியை சரத் கமலுடன் இணைந்து பி.வி.சிந்து ஏந்தி செல்வார் என அறிவிப்பு.மேலும், இந்திய அணியின் தலைவராக அறிவிக்கப்பட்ட மேரி கோம் விலகிய நிலையில் ககன் நரங் நியமனம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com