இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | விவாகரத்து அறிவித்த ஹர்திக் முதல் உ.பி-யில் தடம் புரண்ட ரயில் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, விவாகரத்து அறிவித்த ஹர்திக் பாண்டியா முதல் தடம் புரண்ட ரயில் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • நீலகிரி மாவட்டத்தில் கனமழை எதிரொலி காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும் எனவும், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

  • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு 75,748 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்
காவிரி நீர்pt web
  • நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும் எனவும், நாளை நண்பகல் 12 மணிக்குள் வெளியிட வேண்டும் எனவும் தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தநிலையில் , சட்டத்திருத்தங்கள் அமலுக்கு வந்ததாக தமிழக அரசு அறிவிப்பு.

  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை. இந்நிலையில், பொதுமக்களின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்.

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் அஞ்சலை, பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் அஞ்சலை குறித்து அவரது மருமகனிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகி அஞ்சலை கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!
  • டெல்லியிலிருந்து அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதில், நடுவானில் சென்றபோது பிரச்னை ஏற்பட்டதால், ரஷ்யாவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

  • உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு. இந்நிலையில், இரவு முழுவதும் மீட்புப்பணி நடைபெற்றது.

  • இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் சுப்மன் கில்.

  • மனைவியை பிரிந்தார் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா. மகனை இருவரும் கவனித்து கொள்வோம் என சமூக வலைத்தளத்தில் பதிவு.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
‘இருவரும் பரஸ்பரம் மனம் ஒத்து பிரிகிறோம்’ - இன்ஸ்டாவில் கூட்டாக அறிவித்த ஹர்திக் பாண்டியா, நடாஷா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com