HeadLines|காஞ்சிபுரம் மேயரை மாற்றக்கோரிய கவுன்சிலர்கள் குடும்பத்துடன் சுற்றுலா To இந்திய அணி வெற்றி!

இன்றைய தலைப்புச் செய்திகளைப் பார்க்கலாம்.
Kanchipuram mayor issue to team india win
Kanchipuram mayor issue to team india winpt web
Published on

ஒரு லட்சத்து 55ஆயிரம் கன அடி நீர்வரத்தால் வேகமாக நிரம்புகிறது மேட்டூர் அணை. 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து சரிந்தது. நீர்வரத்து ஒரு லட்சத்து 65ஆயிரம் கன அடியில் இருந்து ஒரு லட்சத்து 45ஆயிரம் கன அடியாக குறைந்தது.

காஞ்சிபுரம் திமுக மேயருக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம். மேயரை மாற்றக்கோரிய கவுன்சிலர்கள் குடும்பத்தோடு சுற்றுலா சென்றுள்ளதால் வாக்கெடுப்பு நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலம் வென்ற மனு பாக்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் மனுபாக்கர்.

Kanchipuram mayor issue to team india win
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: அடுத்த சுற்றுகளில் நீடிக்கும் இந்திய வீரர்கள் யார்? வெளியேறியவர்கள் யார்?

துப்பாக்கிச்சுடுதலில் பதக்கத்தை குறி வைத்துள்ள ரமிதா ஜிண்டால், அர்ஜுன் பபுடா. வில்வித்தை காலிறுதியில் இன்று களமிறங்குகிறது இந்திய ஆண்கள் குழு.

டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்ததற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. பயிற்சி மைய உரிமையாளர் உட்பட 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

டெல்லி
டெல்லிpt web

அமெரிக்காவை தாக்கும் தொலைவில் ஏவுகணைகள் நிலைநிறுத்தப்படும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனியில் தொலைதூர ஏவுகணைகளை நிலைநிறுத்தும் அமெரிக்காவின் முடிவை கண்டித்து ஆவேசம்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் பெயரில் மோசடி. விரிவான விசாரணை நடத்த ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவிட்டுள்ளார்.

Kanchipuram mayor issue to team india win
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: எந்தெந்த நாடுகள் எவ்வளவு பதக்கம்.. இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஆடிக் கிருத்திகை கோலாகலம். காவடிகளுடன் திருத்தணியில் பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்.

ஜெய்ஸ்வால், ஹர்திக்
ஜெய்ஸ்வால், ஹர்திக்pt web

சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே 100 சவரன் நகை கொள்ளை. குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த போது கைவரிசை காட்டியவர்களை தேடுகிறது காவல்துறை...

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியிலும், இந்தியா வெற்றி.. தொடரையும் கைப்பற்றி அசத்தல்

Kanchipuram mayor issue to team india win
சென்னை| மூதாட்டியை கொலை செய்து ஆற்றில் வீசிவிட்டு ‘காணவில்லை’ போஸ்டர் ஒட்டிய நபர்! விசாரணையில் பகீர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com