சாலையோரம் தூங்கிய பெண்ணை கழுத்தை நெரித்துக்கொன்ற இளைஞன்: போலீசார் விசாரணை.!

சாலையோரம் தூங்கிய பெண்ணை கழுத்தை நெரித்துக்கொன்ற இளைஞன்: போலீசார் விசாரணை.!
சாலையோரம் தூங்கிய பெண்ணை கழுத்தை நெரித்துக்கொன்ற இளைஞன்: போலீசார் விசாரணை.!
Published on

இந்தூரில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை இளைஞன் ஒருவன் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தூரிலுள்ள மகாராஜ் யஷ்வந்த் ராவ் மருத்துவமனை முன் 45 வயதுமிக்க பெண் ஒருவர் தினமும் தூங்குவது வழக்கம். அப்படித்தான், கடந்த வியாழக்கிழமை  இரவு தூங்கிக்கொண்ருந்த பெண், காலையில் முகத்தில் காயங்களுடன் இறந்துக் கிடந்துள்ளார். அவர் எப்படி இறந்தார் என்று காவல்துறை விசாரித்தபோது, மருத்துவமனை நிர்வாகத்தினர் சிசிடிவி கேமராவை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். காரணம், நள்ளிரவில் இளைஞன் ஒருவன் பெண்ணை துடிக்கத் துடிக்க கொன்றுள்ளான்.

அந்த வீடியோவில், பெண்ணின் அருகே சுற்றிச்சுற்றி வந்த இளைஞன் படியில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கீழே இழுத்துவந்து பிளாஸ்டிக் கயிறால் கழுத்தை இறுக்குகிறான். அந்தப் பெண் எவ்வளவோ போராடுகிறார். கொன்றே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் கல்லால் முகத்திலும் தலையிலும் அடிக்கிறான். சிறிது நேரத்தில் அப்பெண் துடிதுடித்து அசைவற்றுப் போகிறார்.

 அந்த இளைஞன் அப்பெண்ணை எதற்காக கொன்றான்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். மருத்துவமனையைச் சுற்றித்தான் தொடர்ச்சியாக அந்தப்பெண் யாசகம் செய்து வந்துள்ளார். அப்போது, யாசகம் செய்யும் மற்றொரு பெண்ணுக்கும் இவருக்கும் பிரச்னையாகி இருக்கிறது. ஒருவேளை அந்தப்பெண் ஆள் வைத்து கொன்றாரா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள் காவல்துறையினர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com