பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக துணைவேந்தர் நியமனம்

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக துணைவேந்தர் நியமனம்

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக துணைவேந்தர் நியமனம்
Published on

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக துணைவேந்தராக நீரஜ் திரிபாதி  நியமிக்கப்பட்டுள்ளார். 

உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் மாணவி மீது நடத்தப்பட்ட  பாலியல் துன்புறுத்தலைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிரிஷ் சந்திரா திரிபாதிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் மீது நடத்தப்பட்டது வெறும் ஈவ்-டீசிங் என்ற திரிபாதியின் கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் அவர் நீண்ட விடுமுறையில் சென்றார். இதையடுத்து பல்கலைக்கழக பதிவாளர் நீரஜ் திரிபாதி தற்போது தற்காலிக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com