நான்காவது முறையாக இன்று முதலமைச்சராகிறார் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர மாநில முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக இன்று பதவியேற்க உள்ளார். ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் துணை முதலமைச்சராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரபாபு நாயுடு - பவன் கல்யாண்
சந்திரபாபு நாயுடு - பவன் கல்யாண்கோப்புப்படம்
Published on

175 இடங்களை உள்ளடக்கிய ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில், தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 164 இடங்களைக் கைப்பற்றியது. புதிய அரசின் பதவியேற்பு விழா இன்று நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் கிஞ்சரப்பு அட்சன்நாயுடு, பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி, ஜனசேனா கட்சியின் மூத்த தலைவர் நடேண்ட்லா மனோகர் ஆகியோர், தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டது தொடர்பான கடிதத்தை, ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து வழங்கினர்.

மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ள நிலையில், இன்று புதிய அரசின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. கிருஷ்ணா மாவட்டம் கண்ணாவரம் பகுதியில் உள்ள தொழில்நுட்ப பூங்கா மைதானத்தில், காலை 11.27 மணிக்கு, முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

அமைச்சரவையில், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நர லோகேஷ், ஜனசேனா மூத்த தலைவர் மனோகர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு - பவன் கல்யாண்
24 ஆண்டுகளுக்குப் பின் புதிய தேர்வு... ஒடிசா மாநில முதலமைச்சராக பதவியேற்கிறார் மோகன் சரண் மஜி

இதற்கிடையே, ஜனசேனா கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக பவன் கல்யாண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய அரசில், துணை முதல்வர் பதவியை தனக்கு வழங்கவேண்டும் என்றும், தன் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவேண்டும் என்றும் பவன் கல்யாண் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு - பவன் கல்யாண்
ஆந்திரா: ஜனசேனா கட்சி சட்டமன்றக்குழு தலைவராக பவன் கல்யாண் தேர்வு!

இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்க இருப்பதால், விழா நடைபெறும் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடுட்விட்டர்

டெல்லியில் இருந்து காலை 10.40 மணிக்கு கண்ணாவரம் விமான நிலையம் வந்தடையும் பிரதமர் மோடி, பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டபின், பிற்பகல் 12.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஒடிசாவுக்கு செல்ல இருப்பதாக பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com