வர்த்தகத்தை மேம்படுத்தும் கொள்கையுடன் இந்தியா உள்ளது: சுஷ்மா பேச்சு

வர்த்தகத்தை மேம்படுத்தும் கொள்கையுடன் இந்தியா உள்ளது: சுஷ்மா பேச்சு
வர்த்தகத்தை மேம்படுத்தும் கொள்கையுடன் இந்தியா உள்ளது: சுஷ்மா பேச்சு
Published on

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தக உடன்பாட்டை வலுப்படுத்த இந்தியா கொள்கையுடன் செயல்படுகிறது என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை பலப்படுத்தும் முயற்சிகளின் ஒரு கட்டமாக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். இன்று சிங்கப்பூர் சென்ற அவர் குடியுரிமை இல்லாத வெளிநாட்டு இந்தியர்கள் தினத்தை கொண்டாடினார். 

அப்போது பேசிய சுஷ்மா சுவராஜ், இந்தியா - சிங்கப்பூர் - தாய்லாந்து நாடுகளுக்கிடையே சாலைப் போக்குவரத்துத் திட்டத்தை மேம்படுத்த 16 இந்திய நகரங்கள் இணைந்திருப்பதாக தெரிவித்தார். பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இத்திட்டத்தை மேம்படுத்தவும் இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்தார். வர்த்தக உடன்பாட்டை மேலும் வலுபடுத்த இந்தியா கொள்கையுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com