பாகிஸ்தானுக்கு தீபாவளி பரிசு வழங்கிய சுஷ்மா ஸ்வராஜ்

பாகிஸ்தானுக்கு தீபாவளி பரிசு வழங்கிய சுஷ்மா ஸ்வராஜ்
பாகிஸ்தானுக்கு தீபாவளி பரிசு வழங்கிய சுஷ்மா ஸ்வராஜ்
Published on

பாகிஸ்தான் மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் சிலர், இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்கு அனுமதி அளித்து விசா வழங்குபடி கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், தீபாவளியொட்டி பாகிஸ்தான் மக்களுக்கு இந்தியா சிறப்பு பரிசை அளிக்க திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளார். சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருவதற்காக விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் விரைவில் மருத்துவ விசாக்கள் அளிக்கப்படும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
சமீபத்தில் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற விரும்பிய ஐந்து பாகிஸ்தானியர்களுக்கு சுஷ்மா விசா வழங்கியது குறிப்பிடத்தக்கது.  


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com