3வது நாளாக ஏற்றம்தான்.. புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்!

இந்தியப் பங்குச்சந்தைகள் 3ஆவது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன. காலை 10 மணி அளவில் மும்பைப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 521 புள்ளிகள் உயர்ந்து 75 ஆயிரத்து 596 புள்ளிகளில் வர்த்தகமாகியது.
மும்பை பங்கு சந்தை
மும்பை பங்கு சந்தை PT
Published on

இந்தியப் பங்குச்சந்தைகள் 3ஆவது நாளாக ஏற்றத்துடன்
வர்த்தகமாகின்றன.   காலை 10 மணி அளவில் மும்பைப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 521 புள்ளிகள் உயர்ந்து 75
ஆயிரத்து 596 புள்ளிகளில் வர்த்தகமாகியது.

தேசியப் பங்குச்சந்தையின் நிப்ஃடி 157 புள்ளிகள் அதிகரித்து 22 ஆயிரத்து 979 புள்ளிகளில் வணிகமாகியது.

மற்ற ஆசியப் பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகின்றன. இந்தியப் பங்குச்சந்தைகளில் அந்நிய
முதலீட்டாளர்கள் நேற்று 6 ஆயிரத்து 867 கோடி ரூபாய் மதிப்பில் பங்குகளை விற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு
நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து 83 ரூபாய் 47 காசுகளில் வர்த்தகமாகியது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 14 சென்ட் உயர்ந்து 79.98 டாலரில்
வர்த்தகமாகியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com