சித்தூர்: கொரோனாவுக்கு பயந்து வயலில் குடியேறிய மக்கள்!

சித்தூர்: கொரோனாவுக்கு பயந்து வயலில் குடியேறிய மக்கள்!
சித்தூர்: கொரோனாவுக்கு பயந்து வயலில் குடியேறிய மக்கள்!
Published on

கொரோனா தொற்றுக்கு பயந்து ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே கிராம மக்கள் சிலர் வயல்களில் குடியேறியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சிவாடி கிராமத்தை சேர்ந்த மல்லிகார்ஜுனர் ரெட்டி, வெங்கடரமணா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் தங்களது கிராமத்தில் இருந்து வெளியேறி, சற்று தொலைவில் உள்ள தங்கள் வயல்வெளியில் குடியேறியுள்ளனர்.

கடந்த 3 வாரங்களாக விவசாயம் செய்துகொண்டு தங்களின் தேவையை பூர்த்தி செய்துகொண்டு வசித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயி மல்லிகார்ஜுன ரெட்டி கூறுகையில், தங்களிடம் ஒரு மாதத்துக்கு தேவையான பொருட்கள் இருப்பதாகவும், தங்களிடம் உள்ள பசுக்கள் மூலம் பால் கறந்து பயன்படுத்தி வருவதாகவும் கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com