காஷ்மீரில் முழு அடைப்பு: பலத்த பாதுகாப்பு

காஷ்மீரில் முழு அடைப்பு: பலத்த பாதுகாப்பு
காஷ்மீரில் முழு அடைப்பு: பலத்த பாதுகாப்பு
Published on

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்தது தொடர்பாக  7 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து காஷ்மீரில் இன்று முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்தது தொடர்பான புகாரில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். காஷ்மீர் மற்றும் டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஏழு பேரும் சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதனை கண்டித்து  பிரிவினைவாதிகள் இன்று காஷ்மீரில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com