முன்னாள் அமைச்சரான தேசியவாத காங். மூத்த தலைவர் பாபா சித்திக் படுகொலை - அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாபா சித்திக்
பாபா சித்திக்pt web
Published on

66 வயதான பாபா சித்திக் மும்பை பாந்தரா பகுதியில் உள்ள தனது மகனின் அலுவலகம் அருகே இருந்தபோது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது.

முன்னாள் அமைச்சர் சுட்டுக்கொலை
முன்னாள் அமைச்சர் சுட்டுக்கொலை

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாபா சித்திக் உயிரிழந்தார். பாபா சித்திக் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இருவரை பிடித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

பாபா சித்திக்
’டான் பிராட்மேன் சாதனையை உடைத்த ஜோ ரூட்..’ வெற்றிக்காக அதிக டெஸ்ட் சதமடித்த வீரர்கள் பட்டியல்!

1976ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாபா சித்திக், 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அமைச்சராகவும் பதவிவகித்த வந்த அவர், சமீபத்தில்தான் காங்கிரசில் இருந்து விலகி அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com