அதிகரிக்கும் பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள்... 4 ஆண்டுகளில் 47,000 புகார்கள்!

பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள் குறித்து கடந்த 4 ஆண்டுகளில் நாடெங்கும் 47 ஆயிரம் புகார்கள் பதிவாகியுள்ள.
 பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள்
பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள்கோப்புப்படம்
Published on

பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள் குறித்து கடந்த 4 ஆண்டுகளில் நாடெங்கும் 47 ஆயிரம் புகார்கள் பதிவாகியுள்ள.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பிடிஐ செய்தி நிறுவனம் எழுப்பிய சில கேள்விகளுக்கு தேசிய பட்டியலின மக்கள் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதில், 4 ஆண்டுகளில் பட்டியலின மக்களிடம் இருந்து 47 ஆயிரம் குற்றச்சாட்டுகள் பெறப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா தெரிவித்துள்ளார்.

இதில் கிஷோர் மக்வானா, “பெரும்பான்மையானவை வன்கொடுமை, நிலத்தகராறு, அரசின் சேவைகள் தொடர்பானவை. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார், ஒடிஷா, மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 81% புகார்கள் வந்துள்ளது.

 பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள்
மதுரை | பட்டியலின மக்களை புறக்கணித்துவிட்டு ஊர் திருவிழா நடத்த திட்டம்! எழுந்த எதிர்ப்பு!

புகார்கள் குவிந்து கொண்டே செல்லும் நிலையில் அவற்றுக்கு தீர்வு காண அடுத்த மாதத்திலிருந்து மாநிலங்கள் தோறும் நேரில் சென்று நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளோம்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com