ஜடேஜா ரெஸ்டாரெண்டில் சோதனை - காலாவதியான உணவுப் பொருட்கள் சிக்கியது

ஜடேஜா ரெஸ்டாரெண்டில் சோதனை - காலாவதியான உணவுப் பொருட்கள் சிக்கியது
ஜடேஜா ரெஸ்டாரெண்டில் சோதனை - காலாவதியான உணவுப் பொருட்கள் சிக்கியது
Published on

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் ரெஸ்டாரெண்டில் குஜராத் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில்  காலாவதியான உணவுப் பொருட்கள் சிக்கியது. 

சோதனை நடத்தப்பட்ட ரெஸ்டாரெண்டை ஜடேஜாவின் சகோதரி நைனா கண்காணித்து வந்தார். ஜடேஜாவின் ரெஸ்டாரெண்ட் உட்பட மூன்று இடங்களில் ராஜ்கோட் முனிசிபல் கார்பரேசன் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். 

நீண்ட நாட்கள் பாதுகாக்கப்பட்டு வந்த வேக வைத்த உணவுப் பொருட்கள், பூஞ்சைகள் படந்த பிரெட், காலாவதி தேதி குறிப்பிடப்படாத உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சோதனையில் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட காலாவதி ஆன உணவுப் பொருட்களை அதிகாரிகள் அழித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விரேந்தர் சேவாக் ஆகியோரும் சொந்தமாக ரெஸ்டாரெண்ட் நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com