``காஷ்மீரி பண்டிட்டுகள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது வேதனை”- ராஜ்நாத் சிங்

``காஷ்மீரி பண்டிட்டுகள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது வேதனை”- ராஜ்நாத் சிங்
``காஷ்மீரி பண்டிட்டுகள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது வேதனை”- ராஜ்நாத் சிங்
Published on

“இந்த நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கும் அனைத்து துணிச்சலான இதயங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்” என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

"சௌர்யா திவாஸ்'- இந்திய ஆயுதப் படைகளின் 75 ஆண்டு கூட்டு நடவடிக்கைகளின் நினைவு தின நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் கலந்துகொண்டு வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “பயங்கரவாதத்தை மதத்துடன் இணைக்க பலர் முயற்சித்துள்ளனர். இங்கு அமைந்துள்ள ஆதி சங்கராச்சாரியார் கோவிலுக்கு மக்கள் வெகு தொலைவில் இருந்து வந்து செல்கின்றனர். அவர் தேசத்தின் ஒற்றுமையின் அடையாளமாக இருந்தார். இங்கு அவர் பெயரில் கோயில் இருப்பது கூட தேசத்தின் கலாச்சார ஒற்றுமையின் பெரிய அடையாளம்.

காஷ்மீர் என்ற பெயரில் இந்த அரசு கண்ட பயங்கரவாதத்தின் வெறியை விவரிக்க முடியாது. எண்ணற்ற உயிர்கள் பலியாகின, எண்ணற்ற வீடுகள் அழிக்கப்பட்டன. மதத்தின் பெயரால் எவ்வளவு ரத்தம் சிந்தப்பட்டது என்பதற்குக் கணக்கு இல்லை. பயங்கரவாதத்தை மதத்துடன் இணைக்க பலர் முயற்சித்துள்ளனர். எதிரிலிருப்பவர் இந்துவா, முஸ்லீமா என்று பார்த்தா நடக்கும் பயங்கரவாத செயல்? பயங்கரவாதிகளுக்கு இந்தியாவை குறிவைத்து தங்கள் திட்டங்களை செயல்படுத்த மட்டுமே தெரியும்.

இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது ராணுவம் அல்லது அரச பாதுகாப்புப் படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதெல்லாம், அந்தச் செயலில் பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறல்கள் கண்டறியப்பட்டது. காஷ்மீரி பண்டிட்டுகள் பள்ளத்தாக்கில் இருந்து இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மிகவும் வருத்தமான விஷயம்.

அநீதிக்கு எதிராக சமூகத்தின் அறிவார்ந்த பிரிவினர் வாயை மூடிக்கொண்டால், சமூகத்தின் வீழ்ச்சியில் தாமதம் ஏற்படாது. இங்கு நான் மதிப்பிற்குரிய ஸ்ரீ ஷ்யாமா பிரசாத் முகர்ஜியை நினைவு கூர்கிறேன். 1952 இல் நாட்டில் இந்த முறைக்கு முடிவு கட்டுவதற்காகவும், ஜம்மு காஷ்மீரை முழுமையாக ஒருங்கிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்காகவும் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கிய அவரது புனித நினைவாக தலைவணங்குகிறேன்.

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியின் வரலாற்றைப் பார்த்தால், அதில் டோக்ரா சமூகம் மிக முக்கிய பங்கு வகிக்கும். மகாராஜா குலாப் சிங் ஜி முதல், மஹாராஜா ஹரி சிங் ஜி வரை, டோக்ரா சமூகத்தின் சகோதர சகோதரிகள் ஜம்மு காஷ்மீரில் சமூக-பொருளாதார வளர்ச்சியின் நீரோட்டத்தை சிந்தியுள்ளனர். இன்று, 'சௌர்ய திவாஸ் மற்றும் காலாட்படை தினத்தை' முன்னிட்டு, இந்தியக் குடிமக்களைப் பாதுகாக்கும் அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் ராஜ்நாத் சிங்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com