ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு!

ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு!
ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு!
Published on

பீகாரில் ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள் ளது.

டெல்லியின் ஆனந்த் விஹாரில் இருந்து பீகாரின் ஜோக்பானி என்ற இடத்துக்கு சீமாஞ்சல் எஸ்க்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஜோக்பானி நகரில் இருந்து டெல்லியின் ஆனந்த் விகார் நோக்கி இன்று அதிகாலை வந்துகொண் டிருந்தது. அதிகாலை 3.52 மணிக்கு பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் வந்தபோது, திடீரென தடம் புரண்டது. ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 3 பெட்டிகள் கவிழ்ந்தன. அதிகாலை நேரம் என்பதால் ரயிலில் இருந்தவர்கள் அனைவரும் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்தனர். அவர்களோடு பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். 

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ரயில்வே அமைச்சர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, ஏழு ஆக உயர்ந்துள்ளது.  விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தின ருக்கு ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ 1 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் இழப் பீடு வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com