“ரேபிட் டெஸ்ட் கொரோனாவை உறுதி செய்யாது” - இந்திய மருத்துவ கவுன்சில்

“ரேபிட் டெஸ்ட் கொரோனாவை உறுதி செய்யாது” - இந்திய மருத்துவ கவுன்சில்
“ரேபிட் டெஸ்ட் கொரோனாவை உறுதி செய்யாது” - இந்திய மருத்துவ கவுன்சில்
Published on

கொரோனாவை கண்டறிய பிசிஆர் பரிசோதனை முறையை தான் மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், கொரோனாவைக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தொடர்பாக ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் புகார்கள் அளித்ததை அடுத்து சீனா நிறுவனங்களின் தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

ரேபிட் டெஸ்ட் கருவி என்பது பாதிக்கப்பட்டவருக்கு ‘ஆன்டிபாடி’ (ANTOBODY) எனப்படும் பிறபொருளெதிரி உருவாகியுள்ளதா என்பதை கண்காணிக்கவே பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள மருத்துவ கவுன்சில், தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய அதனை பயன்படுத்த முடியாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

ரேபிட் டெஸ்ட் பயன்பாட்டை இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியிருந்த நிலையில், பிசிஆர் பரிசோதனை முறையே உகந்தது என கூறியுள்ளது. மேலும், கொரோனா பரிசோதனை குறித்து மாநிலங்களுக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com