பெங்களூரு: 30 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டிக்குள் வைக்கப்பட்ட பெண்! சிக்கிய குற்றவாளி?

பெங்களூருவில் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
பெங்களூரு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இடம்
பெங்களூரு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இடம்முகநூல்
Published on

பெங்களூருவில் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.

பெங்களூருவில், தனியாக வசித்து வந்த மகாலட்சுமி என்ற பெண் 30 துண்டுகளாக வெட்டி குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்படிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து 6 தனிப்படை அமைத்து காவல்துறை விசாரணையை தொடங்கினர்.

மகாலட்சுமியின் செல்போனை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பெங்களூர் மாநகர காவல் ஆணையர் தயானந்த், “சந்தேகத்திற்குரிய முதன்மை குற்றவாளியை அடையாளம் கண்டுவிட்டோம்; மேற்குவங்கத்தை சேர்ந்த அந்த குற்றவாளி பெங்களூரில் தங்கியிருந்தார்” என தெரிவித்தார்.

பெங்களூரு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இடம்
பெங்களூரு: 30 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டிக்குள் வைக்கப்பட்ட பெண்! பதறவைக்கும் கொலை சம்பவம்!

குற்றவாளியை கைது செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com