மருத்துவர்கள் இல்லாததால் வலியால் துடித்த கர்ப்பிணி

மருத்துவர்கள் இல்லாததால் வலியால் துடித்த கர்ப்பிணி
மருத்துவர்கள் இல்லாததால் வலியால் துடித்த கர்ப்பிணி
Published on

கர்நாடகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் வலியில் துடித்துப்போனார். 

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றிற்கு கர்ப்பிணிப் பெண் ஒருவர் வலியுடன் சிகிச்சைக்காக வந்துள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால், மருத்துவமனை வாயிலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வலியால் அந்தப் பெண் துடித்துள்ளார். இதையடுத்து வேறு மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் அழைத்து செல்லப்பட்டு, அப்பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்ப்பிணிப் பெண்ணின் குடும்பத்தார், பணியில் இல்லாத மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com