இந்தியா
சனாதனம் குறித்த பேச்சு.. உதயநிதிக்கு பிரதமர் செக்!
சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதிக்கு தக்க பதிலடி தர வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதிக்கு தக்க பதிலடி தர வேண்டும் என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இந்தியா - பாரத் பெயர் சர்ச்சை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்டவர்களே பதில் அளிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.