உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சென்ற விமானம் அவசர தரையிறக்கம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சென்ற விமானம் அவசர தரையிறக்கம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சென்ற விமானம் அவசர தரையிறக்கம்
Published on

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே சென்ற விமானம் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.

கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத் செல்லவிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் நேற்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் புறப்படும்போதே தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் உடனே கொல்கத்தாவிலேயே தரையிறக்கப்பட்டது. 

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Air India&#39;s Kolkata-Hyderabad flight returned back soon after taking off &amp; declared full emergency due to technical reasons yesterday. Chief Justice of India was on board the flight. He will depart for Hyderabad today: Kolkata Airport Director</p>&mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1341929454046625795?ref_src=twsrc%5Etfw">December 24, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இதுகுறித்து கொல்கத்தா விமான நிலைய இயக்குநர் கூறுகையில், “கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட உடனே தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக எமெர்ஜென்ஸி நிலை உருவானது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அப்போது அந்த விமானத்தில் இருந்தார். இன்று அவர் ஹைதராபத் செல்லவுள்ளார்” என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com