பாகிஸ்தானிடமிருந்து விடுதலை வேண்டும்: பாக்.ஆக்ரமிப்பு காஷ்மீரில் பேரணி

பாகிஸ்தானிடமிருந்து விடுதலை வேண்டும்: பாக்.ஆக்ரமிப்பு காஷ்மீரில் பேரணி
பாகிஸ்தானிடமிருந்து விடுதலை வேண்டும்: பாக்.ஆக்ரமிப்பு காஷ்மீரில் பேரணி
Published on

பாகிஸ்தானிடமிருந்து விடுதலை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மாணவர்கள் அமைப்பு பதாகைகள் மற்றும் முழக்கங்களுடன் மாபெரும் பேரணி நடத்தினர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாணவர் அமைப்பு, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு மாபெரும் பேரணியை நடத்தியுள்ளனர். பாகிஸ்தானிடமிருந்து எங்களுக்கு விடுதலை வேண்டும் என்ற கோஷங்கள் மற்றும் பதாகைகளை தாங்கி மாணவர் அமைப்பினர் பேரணியில் ஈடுபட்டனர். 

பேரணி குறித்து மாணவர் அமைப்பின் நிர்வாகி லியாகத்கான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பாகிஸ்தான் தீவிரவாதிகளை அனுப்பி, அங்குள்ள அமைதியை குலைக்கின்றது. எங்கள் பகுதி பெண்கள் பாலியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.

இது முதல் போராட்டம் அல்ல, 2015 ஆம் ஆண்டு முதல் பலமுறை பாகிஸ்தானுக்கு எதிராக இந்த மாணவர் அமைப்பு போராட்டங்களை நடத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com